ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தற்கொலை

திருப்பூர் : ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி திருமணம் செய்து கொண்ட வெள்ளகோவிலைச் சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி திருமணம் செய்து கொண்ட வெள்ளகோவிலைச் சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு நேதாஜி வீதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் நந்தகுமார். கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சத்யபிரியா. இவர்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு உதகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், யாருடை தொடர்பு இல்லாத நிலையில், வெள்ளகோவில், உப்புபாளையம் சாலையில் உள்ள வி.ஐ.பி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

நத்தகுமார் மூலனூரில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம், நந்தகுமார் வேலைக்கு வராததால், அவரது கடையில் வேலை செய்பவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்து பார்க்கும்போது, நந்தகுமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி வெள்ளகோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தரையில் சத்யபிரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இருவரின் வெள்ளகோவில் போலீசார் பிரேதங்களை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...