நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரம் காய்த்துக் குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரம் காய்த்துக் குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் அதிக அளவில் உள்ளன. இயற்கையில் உள்ள அரிய வகை தாவரங்கள் அதிக அளவில் உள்ளதால், இந்த பூங்காவிற்கு தாவரவியல் படிக்கும் மாணவர்கள் வந்து ஆய்வு செய்து செல்வது வழக்கம்.

இமயமலை, நேபாளம் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகளவில் காணப்படும் ருத்ராட்சமரங்கள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ளதால் ருத்ராட்சை மரங்களில் அதிகளவில் காய்கள் காய்க்கத் துவங்கியுள்ளன.
பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்ச மரங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குவதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். கீழே விழும் காய்களை சில சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த ருத்ராட்ச காய்களை சிலர் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர்.
மேலும், சபரிமலைக்கு மாலையிட்டு செல்லும் பக்தர்கள் இங்கு வந்து இவற்றை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ருத்ராட்ச காய்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி வரை மரத்தில் இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.