திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி சாலையில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருப்பூர் வடக்கு போலீசார், கடந்த ஜுலை மாதம் 18-ம் தேதி திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரும் ஒருவரே என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், காதர் பேட்டை பகுதியில் கடைகளில் பணம் திருடிய போது, அந்த பகுதியில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாகப் பணியாற்றும் கார்த்தி என்பவர் பல்வேறு பகுதிகளில் திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கார்த்தியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகை, ரூ. 10,000 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.