கோவையில் பூட்டை உடைத்து திருடும் கொள்ளையர்கள் இருவர் கைது : காவல்துறை அதிரடி: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை : வீட்டின் பூட்டை உடைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

கோவை : வீட்டின் பூட்டை உடைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். 

கோவையில் போத்தனூர், வெள்ளலூர் ,குனியமுத்தூர் மற்றும் கோவைபுதூர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்கும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்கும் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் ஐ ஏ எஸ் உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர். 

மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் செய்த தீவிர சோதனைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சுகுணாபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 



அந்த தேடுதல் வேட்டையில் வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்ற ரோபோ மணிகண்டன் என்பவரையும் அருண்குமார் (22) என்பவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் மணிகண்டன் என்பவர் மீது தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் , 3 முறை குண்டர் சட்டத்தில் கைதான நபர் போன்ற தகவல்கள் கிடைத்தன. 

மேலும், போலீஸ் நடத்திய விசாரணையில்அருண்குமார் மணிகண்டனுக்கு எல்லா குற்ற சம்பவங்களிலும் துணையாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து 2017 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் கோவைப்புதூர் , வெள்ளலூர் மற்றும் போத்தனூரில் உள்ள எல்.ஐ.சி காலனி போன்ற பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் இவ்விசாரணையில் வெளிவந்துள்ளன. 

அதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ,கோட்டூரிலும் மற்றும் திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள வீடுகளில் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டடுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 16 சவரன் தங்க நகைகள், இரண்டு கார்கள் ,ஒரு மோட்டார் பைக் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 



தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சில குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மாநகர காவல் ஆணையாளர், கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறை குழுவினரை பாராட்டியுள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...