கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனில்லாமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனில்லாமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு பழைய பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). கூலித் தொழிலாளியான இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி கல்பனா (65). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், கல்பனா பன்றி காய்ச்சல் முற்றிய நிலையில் உயிரிழந்தார்.
தற்போது பன்றி காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு பழைய பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). கூலித் தொழிலாளியான இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி கல்பனா (65). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், கல்பனா பன்றி காய்ச்சல் முற்றிய நிலையில் உயிரிழந்தார்.
தற்போது பன்றி காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.