தவறான சிகிச்சையால் கூலி தொழிலாளி பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற கூலி தொழிலாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மரணமடைந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற கூலி தொழிலாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மரணமடைந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தாராபுரதிற்கு அருகில் கோவிந்தாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகுடீஸ்வரன். இவர் நெஞ்சு வலி காரணமாக பொன்னாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சிகிச்சை பலனில்லாமல் மகுடீஸ்வரன் உயிரிழந்துள்ளார். 



இதையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்கள் 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :- "ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெஞ்சுவலி சிகிச்சைக்காக சென்றவரை எந்தவித பரிசோதனையும் செய்யாமல் மேலோட்டமாக சிகிச்சைக் கொடுத்துள்ளனர். சரியான பரிசோதனையில்லாமல் தவறான மருந்தை ஊசி மூலமும் செலுத்தியதால் தான் வீடு திரும்பியதும் உயிரிழந்துவிட்டார்" என்கிறார்கள், உறவினர்கள்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை சமரசம் செய்தும் கலைந்து செல்லாததால் சிறிது நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் நீண்ட தூரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...