கோவை: கோவை அருகே அடர்ந்த புதருக்குள் மாட்டிகொண்டு 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவரை சிங்காநல்லூர் போலீசாரும் ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து , மீட்டு கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே அடர்ந்த புதருக்குள் மாட்டிகொண்டு 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவரை சிங்காநல்லூர் போலீசாரும் ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து , மீட்டு கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமாட்சிபுரம் சூரியா நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியம்(40), இவர் காமாட்சிபுரம் போலிஸ் செக்போஸ்ட் எதிரே இருக்கும் வாய்க்காலில் உள்ள முட்புதர் அருகே மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். மேலும் இவர் மயக்கத்திலேயே கடந்த 3 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தவித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த முட்புதர் அருகே காலைகடன் கழிக்க சென்றவர் புதருக்குள் மாட்டி கிடந்தவரை மீட்க முயற்சி செய்து பின்னர் முடியாமல் சிங்காநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜேஷ்,பாலமுருகன் மற்றும் சுகுமார் ஆகியோரும் ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் அடர்ந்த முட்புதருக்குள் மாட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியத்தை மீட்டனர். பின்னர் அவருக்கு நீர் மற்றும் உணவு கொடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கடந்த 3 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்த சுப்பிரமணியத்தை காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ், பாலமுருகன் மற்றும் சுகுமார் ஆகியோரும், ஆத்மா அறக்கட்டளை சேர்ந்தவர்களும் மீட்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.