மாவோயிஸ்ட்டு நிர்வாகிகள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் அனுசரிப்பு : தமிழக - கேரள எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு

கோவை : மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், தமிழக – கேரள எல்லையோர வனப்பகுதியில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், தமிழக – கேரள எல்லையோர வனப்பகுதியில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதி மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள கேரள வனப்பகுதியான அட்டப்பாடி காட்டை ஒட்டியுள்ளதாகும். இதனால், அடர்ந்த வனப்பகுதி வழியே தமிழகத்தினுள் மாவோயிஸ்ட்டுக்களின் ஊடுருவலை தடுக்க இருமாநில எல்லையோரங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 



தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படையினர் எல்லையோர காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியான நிலம்பூர் என்னும் காட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுக்களை சுற்றி வளைத்த கேரள அதிரடிப்படை போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்பும் மோதிக்கொண்ட இத்துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் பெண் மாவோயிஸ்ட் அனிதா மற்றும் குப்புராஜ் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் இருந்த மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி சென்றனர். 

இச்சம்பவத்தை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுக்களின் மரணத்திற்கு உரிய பதிலடி தரப்படும் என அந்த இயக்கத்தின் சார்பில் இரு மாநில எல்லையோர மலைக்கிராமங்களில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில், நாளை இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் என்பதால் மாவோயிஸ்ட்டுக்கள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற தகவலின் பேரில், தமிழக - கேரள எல்லையோரப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கேரள வனத்தில் இருந்து கோவைக்குள் நுழையும் அனைத்து மலைச்சாலைகளிளும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கேரள காடுகளை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படையினர் புகுந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...