கோவை : முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய நபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை : முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய நபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கும், அதே தெருவைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதியன்று மணிகண்டன், பிருத்திவிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மணி, அமுதன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வசைச் சொற்களால் வாக்குவாதம் முற்றியதையடுத்து, மூவரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, பிரித்திவிராஜ் சம்பவ இடத்திலிருந்த கல்லை எடுத்து மணிகண்டனை மேலும் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் எண் - 3-ல் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்த போது, பிருத்திவிராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையெடுத்து, பிரித்திவிராஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் வேலுச்சாமி தீர்ப்பளித்தார்.
சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கும், அதே தெருவைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதியன்று மணிகண்டன், பிருத்திவிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மணி, அமுதன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வசைச் சொற்களால் வாக்குவாதம் முற்றியதையடுத்து, மூவரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, பிரித்திவிராஜ் சம்பவ இடத்திலிருந்த கல்லை எடுத்து மணிகண்டனை மேலும் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் எண் - 3-ல் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்த போது, பிருத்திவிராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையெடுத்து, பிரித்திவிராஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் வேலுச்சாமி தீர்ப்பளித்தார்.