நாகையில் கஜா புயல் பாதித்த இடங்களில் 2863 கைப்பம்புகள் அமைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

நாகை: நாகையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக 2,863 கைப்பம்புகள் அமைக்க செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நாகை: நாகையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக 2,863 கைப்பம்புகள் அமைக்க செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலையூர் ஊராட்சியில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 



நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு கஜா புயலினை மிக கவனமுடன் எதிர்கொண்டு, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கீழையூர், கீழ்வேளுர், திருமருகள், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் 198 ஊராட்சிகளில் 980 குக்கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஜெனரேட்டர்கள் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்யப்படும். நிரந்தர தண்ணீர் தேவையைக் கணக்கில் கொண்டு நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 980 குக்கிராமங்களில் தலா ரூ.7,000 வீதம் 2,863 கைப்பம்புகள் ரூ. 2.41 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் அமைக்கப்படவுள்ளது. அவற்றில் தற்போது வரை 79 கைப்பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் விரைந்து முடித்திட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்துத் துறை அமைச்சர்களும் புயல் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலேயே முகாமிட்டுள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். ஆதலால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் ஏதுவாக இருப்பினும் அமைச்சர்களிடம் தெரிவித்து உடனடித் தீர்வை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...