கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி காவிரி (40). இவர் கடந்த 19-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி மலையம்மாள் (70). இவரும் மர்ம காய்ச்சலினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.
அன்னூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமியின் மகன் பேச்சியண்ணன் (73). இவர் கடந்த 21-ஆம் தேதி பன்றி காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த ராமசாமியின் மனைவி அன்னபூர்ணி (60). இவர் காய்ச்சல் பாதிப்பில்
கடந்த 13-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இன்று மாலை 3:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாராபுரம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி காவிரி (40). இவர் கடந்த 19-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி மலையம்மாள் (70). இவரும் மர்ம காய்ச்சலினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.
அன்னூர் பகுதியை சேர்ந்த ரங்கசாமியின் மகன் பேச்சியண்ணன் (73). இவர் கடந்த 21-ஆம் தேதி பன்றி காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அதேபோல, பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த ராமசாமியின் மனைவி அன்னபூர்ணி (60). இவர் காய்ச்சல் பாதிப்பில்
கடந்த 13-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இன்று மாலை 3:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.