உதகை தினசரி மார்க்கெட் சந்தையில் உள்வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல் : வியாபாரிகள் கூடியதால் பரபரப்பு

நீலகிரி : உதகை தினசரி மார்க்கெட் சந்தையில் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வியாபாரிகள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : உதகை தினசரி மார்க்கெட் சந்தையில் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வியாபாரிகள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் சந்தையில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கடைகளின் வாடகையை உயர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், தற்போது வழங்கப்பட்டு வரும் வாடகையை விட பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், தற்போதைய வாடகையை விட 50 சதவீதம் அதிகமாக வழங்க வியாபாரிகள் முன்வந்தனர்.



ஆனால், நகராட்சி நிர்வாகம் அதனை ஏற்றுக் கொள்ளாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் ஒன்றிணைந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சந்தையில் 313 கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, திடீரென வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் ஒன்று கூடினர். இதனால், சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெகுநேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...