கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாள் வருமானம் நிவாரணமாக அளிப்பு : கோவை ஆட்டோ ஓட்டுநரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது இரண்டு நாள் வருமானத்தை நிவாரணமாக அளித்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது இரண்டு நாள் வருமானத்தை நிவாரணமாக அளித்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

அண்மையில் வீசிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை முழுவதும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கோவை மாவட்டம் கணபதியை அடுத்த சங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் எண்ணினார்.



அதன்படி, இரண்டு நாட்கள் ஆட்டோ ஓட்டும்போது கிடைக்கும் வருமானத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்து, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆட்டோவை ஓட்டியுள்ளார். இதில், கிடைத்த வருமானம் மற்றும் பயணிகளிடமும் நிவாரணம் பெற்று அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 



இது குறித்து அவர் கூறுகையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். 2 நாட்களாக ஆட்டோ ஓட்டியதில் கிடைத்த வருமானம் மற்றும் பயணிகள் வழங்கிய நன்கொடைகளைச் சேர்த்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன். ரூ. 3,000 நிவாரணமாக அளித்துள்ளேன். ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டம் போது மூன்று நாட்கள் இலவசமாக ஆட்டோ ஓட்டினேன்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...