கோவை: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் தலைமையில், துணை ஆணையாளர்கள் டாக்டர்.பாலாஜி சரவணன், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள், நிலுவையிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள், போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பேசியதாவது:-
நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
புகார் கொடுக்க வரும் மக்களை அலைக்கழிக்கக் கூடாது. பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் தலைமையில், துணை ஆணையாளர்கள் டாக்டர்.பாலாஜி சரவணன், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள், நிலுவையிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள், போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பேசியதாவது:-
நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
புகார் கொடுக்க வரும் மக்களை அலைக்கழிக்கக் கூடாது. பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.