ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் சாதி மறுத்துக் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படுகொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும், இது போன்ற சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும், மேலும், சாதி ஆணவ கொலைகளில் ஈடுபடுபவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 81 ஆணவப்படுகொலைகள் நடந்தும் தமிழக அரசு மவுனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...