யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு

கோவை : நாடு முழுவதும் இருக்கும் யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : நாடு முழுவதும் இருக்கும் யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

அஸ்ஸாம் மாநிலத்தில் யானைகள் தொடர்ந்து உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவற்றின் வழித்தடங்களை அங்கீகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பிரதீப் குமார் பூயன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதி கூறியதாவது :- யானைகள் வழித்தடம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு தற்போது நேரடியாக உத்தரவிடுகிறேன். நாடு முழுவதும் இருக்கும் யானை வழித்தடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது தொடர்பான முடிவை 2 வார காலத்திற்குள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறினார். 

இதனிடையே, லைல்டு லைஃப் டிரஸ் ஆஃப் இந்தியாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில், '70 சதவீதத்திற்கும் அதிகமான யானை வழித்தடங்கள், பட்டா நிலங்கள் போன்ற வனத்துறைக்கு சொந்தமில்லாத பகுதிகளில் வருகிறது. இதனை மீட்பது அரசுக்கு கடும் சவாலான காரியம்,' எனக் குறிப்பிட்டுள்ளது. 

யானை வழித்தடங்கள் முறையாக அங்கீகரிக்கப்படாததால், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் உயிரிழப்புகள் அதிகரித்துக் காணப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனித - யானை மோதல் சம்பவங்கள் ஏற்படுவதாகவும், ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதும், உயர்மின் அழுத்தம் மற்றும் மின்கம்பிகளில் சிக்கியும் யானை உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...