கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்திற்கு தீ வைத்தனர். பேருந்தில் பயணித்த மூன்று மாணவியர் தீயில் கருகி சாம்பலாகினர். இது தொடர்பாக, பேருந்து எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில், அ.தி.மு.க.வை.ச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார். அதன்படி, 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர், வடவள்ளி சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று பிற்பகலில் தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து மிகுந்த வடவள்ளி சாலையில் போராட்டம் நடத்தினர்.

"இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு முன்னதாக, தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டுவது ஏன்..?," என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்திற்கு தீ வைத்தனர். பேருந்தில் பயணித்த மூன்று மாணவியர் தீயில் கருகி சாம்பலாகினர். இது தொடர்பாக, பேருந்து எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில், அ.தி.மு.க.வை.ச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார். அதன்படி, 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர், வடவள்ளி சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று பிற்பகலில் தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து மிகுந்த வடவள்ளி சாலையில் போராட்டம் நடத்தினர்.

"இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு முன்னதாக, தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டுவது ஏன்..?," என அவர்கள் கேள்வி எழுப்பினர்.