திருப்பூர்: திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 30-ந்தேதி சிறுமியின் தாய் பனியன் கம்பெனிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் ரங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், 4 வயது குழந்தையை வாயில் துணியை வைத்து அடைந்து வீட்டின் மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மர்ம உறுப்பு மற்றும் வாய் பகுதிகளில் ரத்த காயங்களுடன் அழுத நிலையில் மாடியிலிருந்த வந்த சிறுமி, தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் கதவை தட்டியுள்ளது.
இதனிடையே, சிறுமி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு மக்கள், குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை ரங்கநாதன் தான் பாலியல் பலாத்காரம் செய்தது என்பது தெரிய வந்தது, இதனையடுத்து, போலீசார் ரங்கநாதனிடம் நடத்திய விசாரணையில், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அனுப்பர்பாளையம் போலீசார் ரங்கநாதனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.