கோவை: பீளமேடு அருகே 15 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய்க் குட்டியை தீயணைப்புத் துறையினர் குழந்தையைப் போல மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பீளமேடு அருகே 15 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய்க் குட்டியை தீயணைப்புத் துறையினர் குழந்தையைப் போல மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி எதிரே ஒரு வீடு வாங்கியுள்ளார். மேலும், அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டவும் திட்டமிட்டிருந்தார்.
ஆதலால் இந்த வீட்டை பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைத்திருந்ததால், அந்த வீட்டின் முன் பகுதியில் இருந்த 15 அடி ஆழம் 15 அடி அகலம் கொண்ட தண்ணி தொட்டி திறந்து கிடந்தது. அதில் குப்பைகள் நிறைந்து கழிவுகள் தேங்கி இருந்தன.
இந்தநிலையில், நேற்று காலையில் அந்த பகுதியாக வந்த நாய் ஒன்று தவறி தொட்டிக்குள் விழுந்தது. காலையிலிருந்து இரவு வரை நாய் கத்திக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், ஏணியை உள்ளே அமைத்து உடலில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு, நாய்க்கு தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். நாய்க்கு உணவு கொடுத்து பசியாற்றி அதை சமாதானப்படுத்தி, கயிறு கட்டி ஒரு குழந்தையை மீட்பது போல மீட்டனர்.
இந்த சம்பவங்களை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி எதிரே ஒரு வீடு வாங்கியுள்ளார். மேலும், அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டவும் திட்டமிட்டிருந்தார்.
ஆதலால் இந்த வீட்டை பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைத்திருந்ததால், அந்த வீட்டின் முன் பகுதியில் இருந்த 15 அடி ஆழம் 15 அடி அகலம் கொண்ட தண்ணி தொட்டி திறந்து கிடந்தது. அதில் குப்பைகள் நிறைந்து கழிவுகள் தேங்கி இருந்தன.
இந்தநிலையில், நேற்று காலையில் அந்த பகுதியாக வந்த நாய் ஒன்று தவறி தொட்டிக்குள் விழுந்தது. காலையிலிருந்து இரவு வரை நாய் கத்திக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், ஏணியை உள்ளே அமைத்து உடலில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு, நாய்க்கு தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். நாய்க்கு உணவு கொடுத்து பசியாற்றி அதை சமாதானப்படுத்தி, கயிறு கட்டி ஒரு குழந்தையை மீட்பது போல மீட்டனர்.
இந்த சம்பவங்களை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.