கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கோவை : தர்மபுரி பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்திற்கு தீ வைத்தனர். பேருந்தில் பயணித்த மூன்று மாணவியர் தீயில் கருகி சாம்பலாகினர்.
இது தொடர்பாக, பேருந்து எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில், அ.தி.மு.க.வை.ச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுதலை செய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர், வடவள்ளி சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 மாணவிகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அரசின் இந்த நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால், மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

"இந்த விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ஆளுநர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது," இவ்வாறு கூறினார் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் மாநில செயலர் மாரியப்பன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்திற்கு தீ வைத்தனர். பேருந்தில் பயணித்த மூன்று மாணவியர் தீயில் கருகி சாம்பலாகினர்.
இது தொடர்பாக, பேருந்து எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில், அ.தி.மு.க.வை.ச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுதலை செய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர், வடவள்ளி சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 மாணவிகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அரசின் இந்த நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால், மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

"இந்த விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ஆளுநர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது," இவ்வாறு கூறினார் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் மாநில செயலர் மாரியப்பன்.