திருமூர்த்தி அணையிலிருந்து வட்டமலைக்கரை அணைக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் தீர்மானம்

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வட்டமலைக்கரை அணையைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வட்டமலைக்கரை அணையைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வட்டமலை அணை நீரை எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் ஒரு மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். தற்போது, பருவ மழையின் காரணமாக நிரம்பும் நிலையில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 



அதாவது, வெள்ளகோவில் அருகே கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு இறுதியாக 1984 மற்றும் 1986-ம் ஆண்டுகள் என இரு முறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கென தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு, அணைக்கு தண்ணீர் வரத்து இன்றி 20 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது. பருவ மழை காலங்களில் கூட இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்திருக்கிறது. 

இதனால், அணைக்கு அருகே உள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துபோயுள்ளது. அதே நேரத்தில், திருமூர்த்தி அணையில் உபரி காலங்களில் கள்ளிபாளையம் பகுதியில் இருந்து வட்டமலை அணைக்கு தண்ணீர் திறக்க அரசாணை இருந்தும், இதுவரையிலும் ஒருமுறை கூட அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, இனிவரும் காலத்திலாவது வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் விவசாயிகள்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...