கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த தி.மு.க முன்னாள் எம்.பி

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு சென்னை செல்வதற்காக சென்ற தி.மு.க.,வை சேர்ந்த தூத்துக்குடி முன்னாள் எம்.பி ஜெயதுரையிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு சென்னை செல்வதற்காக சென்ற தி.மு.க.,வை சேர்ந்த தூத்துக்குடி முன்னாள் எம்.பி ஜெயதுரையிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.பி எஸ்.ஆர் ஜெயதுரை. இவர் நேற்றிரவு கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் வந்துள்ளார். அப்போது விமானத்தில் ஏறுவதற்கு முன் சோதனை அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் அவரையும், அவர் கொண்டுவந்த பை மற்றும் சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.

இதில் அவரிடம் ஐந்து தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். மேலும், ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயதுரை, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல தான் உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்துள்ளதாக கூறிய அவர், தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார். ஆனால், அதிகாரிகள் விமான நிலைய விதிகளுக்குட்பட்டு ஆயுதத்தை கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயதுரை அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார்.

இருப்பினும் அவர் பயணம் செய்யவிருந்த விமானம் கிளம்பிவிட்டதால் அடுத்த விமானத்தில் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பீளமேடு போலீசார் அனுமதியின்றி விமான நிலையத்திற்குள் துப்பாக்கி கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.



மேலும், முன்னாள் எம்.பி இடமிருந்து விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...