ரயில் நிலையத்தில் பணிக்கு சென்ற துப்புரவு பணியாளர் - பிணமாக போலீசாரால் மீட்பு

கோவை: கோவை ரயில் நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர் ரயில் பெட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை ரயில் நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர் ரயில் பெட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் அருகே உள்ள கல்லறை சேரியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53), இவர் கோவை ரயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இவர் பணியில் உள்ள ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார். பணி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உடன் பணிபுரியும் தொழிலாளர்கள், முருகனைத் தேடியுள்ளனர். அப்போது அவரை ரயில் பெட்டியில் பிணமாகக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக் குறைவால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...