கோவை: பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் இணைய பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும் லுசிடியஸ் நிறுவனமும் இணைந்து இணையதளத்தையும் ஸ்மார்ட் உபகரணங்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று (சனிக்கிழமை) கோவை ரெசிடன்சியில் நடத்தியது.
கோவை: பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் இணைய பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும் லுசிடியஸ் நிறுவனமும் இணைந்து இணையதளத்தையும் ஸ்மார்ட் உபகரணங்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று (சனிக்கிழமை) கோவை ரெசிடன்சியில் நடத்தியது.

இதில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் பேசுகையில், "சமீப காலங்களில் மனித வாழ்க்கையை சுலபமாக ஆக்கிட பல தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை உபயோகப்படுத்துவதில் ஒரு சில அபாயங்களும் உள்ளன. குறிப்பாக இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்துவதற்கு சில பாதுகாப்பு முறைகளும் அவசியமாகின்றன." என்றார்.

விழாவில் தலைமை வகித்த கோவை மண்டல டிஐஜி ஜி. கார்த்திகேயன் பேசுகையில், "இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 12,317 சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சைபர் பாதுகாப்பிற்காக அரசும், தனியார் நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சைபர் உலகின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்." என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சுமித் சரண் பேசுகையில், "இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு 46.5 கோடியாக உயர்ந்துள்ளது. அரசாங்கமும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற பல கணினி சேவைகளால் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது." என்றார்.

நிகழ்ச்சியில், லுசிடியஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் தியாகி சைபர் குற்றங்கள் நடைபெறுவதை செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார். அவர் டென்மார்க்கில் உள்ள விமானநிலையத்தில் உள்ள ஒரு காமிராவின் மூலம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காண்பித்து சைபர் குற்றத்தை பற்றி விவரித்தார்.

இதில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் பேசுகையில், "சமீப காலங்களில் மனித வாழ்க்கையை சுலபமாக ஆக்கிட பல தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை உபயோகப்படுத்துவதில் ஒரு சில அபாயங்களும் உள்ளன. குறிப்பாக இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்துவதற்கு சில பாதுகாப்பு முறைகளும் அவசியமாகின்றன." என்றார்.

விழாவில் தலைமை வகித்த கோவை மண்டல டிஐஜி ஜி. கார்த்திகேயன் பேசுகையில், "இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 12,317 சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சைபர் பாதுகாப்பிற்காக அரசும், தனியார் நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சைபர் உலகின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்." என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சுமித் சரண் பேசுகையில், "இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு 46.5 கோடியாக உயர்ந்துள்ளது. அரசாங்கமும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற பல கணினி சேவைகளால் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது." என்றார்.

நிகழ்ச்சியில், லுசிடியஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் தியாகி சைபர் குற்றங்கள் நடைபெறுவதை செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார். அவர் டென்மார்க்கில் உள்ள விமானநிலையத்தில் உள்ள ஒரு காமிராவின் மூலம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காண்பித்து சைபர் குற்றத்தை பற்றி விவரித்தார்.