கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதரை மோசமாக சித்தரித்த பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதரை மோசமாக சித்தரித்த பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.,வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் பேஸ்புக் மற்றும் சமூக வலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
இந்தநிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதேபோல அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (A) , 505 ( 2 ) ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.,வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் பேஸ்புக் மற்றும் சமூக வலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
இந்தநிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதேபோல அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (A) , 505 ( 2 ) ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.