நீலகிரி : உதகையில் 65-வது அனைத்து இந்தியா கூட்டுறவு வார விழாவையோட்டி, ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நீலகிரி : உதகையில் 65-வது அனைத்து இந்தியா கூட்டுறவு வார விழாவையோட்டி, ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நடைபெற்ற 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியையொட்டி கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் கஜா புயலில் பலியான 35 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சுயஉதவி குழு கடன், சிறு வணிக கடன், மகளிர் வளர்ச்சி கடன் என 357 பயனாளிகளுக்கு ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்டோர் வழங்கினர்.

மேலும், கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நடைபெற்ற 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியையொட்டி கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் கஜா புயலில் பலியான 35 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சுயஉதவி குழு கடன், சிறு வணிக கடன், மகளிர் வளர்ச்சி கடன் என 357 பயனாளிகளுக்கு ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்டோர் வழங்கினர்.

மேலும், கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
