கோத்தகிரியில் இளம்பெண் தற்கொலை : குடும்பத்தினரிடம் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை பகுதியில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை பகுதியில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

கோத்தகிரி அருகிலுள்ள கொட்டகம்பை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிவண்ணன் (29). இவரது மனைவி கவிதா (24). இவர்களுக்குத் திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு மதுஸ்ரீ என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். மேலும், கவிதா தனது மாமனார் கணேசன் (58) மாமியார் சரோஜா (52) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த மற்றொரு அறையில் கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவிதாவை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, திருச்சி துறையூர் வைரசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் கவிதாவின் அண்ணன் செந்தில்குமார் (30) கொடுத்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 



மணிவண்ணன் - கவிதா தம்பதியினருக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் கோத்தகிரிக்கு சென்று மணிவண்ணன் பெற்றோர் மற்றும் கவிதாவின் அண்ணன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அவருடன் குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...