கோவை : இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக சித்தரித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோவை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை : இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக சித்தரித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோவை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் முகநூல் மற்றும் சமூகவலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இந்த நிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பரப்பி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மேலும், அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர், கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். அப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை இடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் முகநூல் மற்றும் சமூகவலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இந்த நிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பரப்பி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மேலும், அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர், கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். அப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை இடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.