பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் அண்ணாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மனோகரனின் மகன் நாகேந்திர பாரதி (19). அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் (15) மற்றும் பாபு (19) ஆகிய 3 பேரும் கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, தாமரைக் குளம் அருகே செல்லும்பொழுது எதிரே வந்த காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரை ஓட்டிவந்த உடுமலைப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு (58) என்பவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.



மேலும், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் விதியை மீறி ஹெல்மெட்கள் அணியாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...