கோவை : கோவை மாவட்டம் ரங்கே கவுண்டர் வீதியிலுள்ள உள்ள தனியார் குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 500 கிலோவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை : கோவை மாவட்டம் ரங்கே கவுண்டர் வீதியிலுள்ள உள்ள தனியார் குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 500 கிலோவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பான்மசாலா, குட்கா பொருட்களை முழுவதும் அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதில், கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கிலோ கணக்கிலும், டன் கணக்கிலும் பறிமுதல் செய்யப்படுகிறது.

பொன்னையா ராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், சுமார் 450 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரங்கே கவுண்டர் வீதியில் இன்று 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். காலை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள இமான்படை சந்து பகுதியில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து, அதிகாரிகள் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
கோவையில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பான்மசாலா, குட்கா பொருட்களை முழுவதும் அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதில், கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கிலோ கணக்கிலும், டன் கணக்கிலும் பறிமுதல் செய்யப்படுகிறது.

பொன்னையா ராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், சுமார் 450 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரங்கே கவுண்டர் வீதியில் இன்று 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். காலை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள இமான்படை சந்து பகுதியில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து, அதிகாரிகள் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
கோவையில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.