கோவை : கோவை நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் மத்திய அரசின் பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
கோவை : கோவை நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் மத்திய அரசின் பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில், போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக சஞ்சய் பாபா விசாரணை நடத்தி வருகிறார். இதே நீதிமன்றத்தில் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு வழக்கறிஞராக ரேணுகா பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளின் போது வாய்மொழியாகவும், செயல்கள் மூலமாகவும் பொறுப்பு நீதிபதியாக உள்ள சஞ்சய் பாபா துன்புறுத்துவதாக மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். அதேபோல, நீதிபதிகள் தன்னுடைய வழக்கை மட்டும் காலதாமதம் செய்தும், சிறுமைப்படுத்தியும் பேசுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, நீதிபதி மீது பணியிடங்களில் பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு வழக்கறிஞர் ரேணுகா, போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் பொறுப்பற்று செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் 26 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோவை இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதிபதி மீது வழக்கறிஞர் ரேணுகா புகார் அளிப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில், போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக சஞ்சய் பாபா விசாரணை நடத்தி வருகிறார். இதே நீதிமன்றத்தில் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு வழக்கறிஞராக ரேணுகா பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளின் போது வாய்மொழியாகவும், செயல்கள் மூலமாகவும் பொறுப்பு நீதிபதியாக உள்ள சஞ்சய் பாபா துன்புறுத்துவதாக மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். அதேபோல, நீதிபதிகள் தன்னுடைய வழக்கை மட்டும் காலதாமதம் செய்தும், சிறுமைப்படுத்தியும் பேசுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, நீதிபதி மீது பணியிடங்களில் பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு வழக்கறிஞர் ரேணுகா, போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் பொறுப்பற்று செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் 26 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோவை இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதிபதி மீது வழக்கறிஞர் ரேணுகா புகார் அளிப்பது குறிப்பிடத்தக்கது.