நாகை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
நாகை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையைக் கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் வேதாரண்யம் செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 46 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலுமாக முடங்கியது. மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.வேதாரண்யத்தில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையைக் கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து கிடப்பதால் வேதாரண்யம் செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 46 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலுமாக முடங்கியது. மொத்தமாக அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.