நீலகிரி : குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறையில் இருந்து தவறி விழுந்த 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி : குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறையில் இருந்து தவறி விழுந்த 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரின் மகன் மதலை முத்து (19). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறை பகுதிக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்து மதலை முத்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வனத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின் உடல் மீட்கப்பட்டது. மேல் குன்னூர் காவல்துறை ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையிலான போலீசார் மதலை முத்துவின் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலையா..? தற்கொலையா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரின் மகன் மதலை முத்து (19). இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் டான்டீ டைகர்ஹில் பகுதியில் உள்ள மரணப்பாறை பகுதிக்கு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்து மதலை முத்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், வனத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின் உடல் மீட்கப்பட்டது. மேல் குன்னூர் காவல்துறை ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையிலான போலீசார் மதலை முத்துவின் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலையா..? தற்கொலையா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.