எனது கார் வரும் போது பொதுமக்களை மறிக்கக்கூடாது: மேடையில் இருந்தபடியே போலீசாருக்கு உத்தரவிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.



இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2,129 மடிக்கணினிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் மாணவர் மத்தியில் பேசிய அமைச்சர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த இலவச மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



கோவை மாவட்டத்தில் உள்ளி பள்ளிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்க உள்ளோம். படித்து முடித்த இளைஞர்கள் பணிக்கான நேர்காணலுக்குச் செல்லும் போது அங்கு சிறப்பாக செயல்படுவதில்லை. இதற்காக கோச்சிங் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது.



மாணவர்கள் சிறப்பாக படித்து அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக இவற்றை செய்து வருகிறோம். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் உள்ளனர்." என்றார்.



இதனைத்தொடர்ந்து விழா மேடையில் இருந்த படியே காவல் துறையினரிடம் பேசிய அவர், "நிகழ்ச்சிகளுக்கு எனது வாகனம் வரும் போது மக்களை முன் கூட்டியே தடுத்து நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனது கார் வரும் போது பொது மக்களைத் தடுக்க வேண்டாம் என ஏற்கனவே காவல் துறையினருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ளேன். இனிமேல் மக்களை தடுக்கக் கூடாது." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...