திருப்பூர் பனியன் தொழிலாளியின் மனைவிக்கு ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண் குழந்தை

திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உமா. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி உமா. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்த உமா-விற்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணி 108 ஆம்புலன்சை அழைத்து உமாவை அதில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.

இருப்பினும் உமாவிற்கு வலி அதிகமாகி குழந்தை பிறக்கும் நேரம் ஆனதால் சாதூர்யமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஐயப்பன் மற்றும் செவிலியர் உதவியாளர் சரவணதேவி இருவரும் வாகனத்தை ஓரமாக நிறுத்தினர்.



மேலும், உமா-விற்கு ஆம்புலன்சிலேயே அவர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது உமா-விற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, தாயையும், சேயையும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். சாமர்த்தியமாகச் செயல்பட்டு தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...