கோவை: தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மலைப்பகுதிகளில் சமூகவிரோதிகள் யாரேனும் பயிர் செய்தால் உடனடி தகவல் அளிக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மலைப்பகுதிகளில் சமூகவிரோதிகள் யாரேனும் பயிர் செய்தால் உடனடி தகவல் அளிக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது. அதேபோல போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடுபவர்களையும் தனிப்படைகள் அமைத்தும் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மலையடிவாரங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கஞ்சா பயிரிடுவதை தடுக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் உடன் இணைந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கஞ்சா பயிர் வளர்ப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதா ? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டது.
அதேபோல கஞ்சா பயிரிடப்பட்டு அழிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீண்டும் பயிரிடப்பட்டுள்ளதா? என்றும் கண்காணித்தனர். மலைவாழ் கிராம மக்களிடம் சமூக விரோதிகள் யாரேனும் கஞ்சா பயிர் செய்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த சில வருடங்களாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது. அதேபோல போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபடுபவர்களையும் தனிப்படைகள் அமைத்தும் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மலையடிவாரங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கஞ்சா பயிரிடுவதை தடுக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் உடன் இணைந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கஞ்சா பயிர் வளர்ப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதா ? என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டது.
அதேபோல கஞ்சா பயிரிடப்பட்டு அழிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீண்டும் பயிரிடப்பட்டுள்ளதா? என்றும் கண்காணித்தனர். மலைவாழ் கிராம மக்களிடம் சமூக விரோதிகள் யாரேனும் கஞ்சா பயிர் செய்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.