தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம், கஜா புயலா..? அல்லது அரசியல் புயலா...? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம், கஜா புயலா..? அல்லது அரசியல் புயலா...? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஜா புயலால் தேர்தல் தள்ளிப் போகிறதா அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை தமிழக மக்களைப் பொருத்தவரை மத்திய அரசு பயனில்லாமலே இருந்து வருகிறது என திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களே பலம் வாய்ந்தவர்கள். மக்களே பலத்தை முடிவு செய்ய வேண்டியவர்கள். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
எனவே, மத்திய அரசு தமிழக மக்களைப் பொருத்தவரை பயனில்லாமலே இருந்து வருகிறது. எனவே, பலம் என்பது மக்கள் அரசின் மீது கொண்டுள்ள அபிப்ராயம் தான். ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி சதி, நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசு இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கான தண்டனையை குறுகிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சல் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழக அரசு தீவிர முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நியாயமாக நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். அது நடைபெறுமா..? நடைபெறாத..? என்ற நிலையே உள்ளது. 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் அதற்கு மழை அதிகமாக பெய்கிறதா..?, வெயில் அதிகம் அடிக்கிறதா..?, என்பது எங்களுக்கு தெரியவில்லை. கஜா புயலால் தேர்தல் தள்ளிப்போக போகிறதா..? அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வரும் நவம்பர் 25-ம் தேதி அரியலூரில் நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் தேர்தல் தள்ளிப் போகிறதா அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை தமிழக மக்களைப் பொருத்தவரை மத்திய அரசு பயனில்லாமலே இருந்து வருகிறது என திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களே பலம் வாய்ந்தவர்கள். மக்களே பலத்தை முடிவு செய்ய வேண்டியவர்கள். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
எனவே, மத்திய அரசு தமிழக மக்களைப் பொருத்தவரை பயனில்லாமலே இருந்து வருகிறது. எனவே, பலம் என்பது மக்கள் அரசின் மீது கொண்டுள்ள அபிப்ராயம் தான். ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி சதி, நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசு இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கான தண்டனையை குறுகிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சல் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழக அரசு தீவிர முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நியாயமாக நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். அது நடைபெறுமா..? நடைபெறாத..? என்ற நிலையே உள்ளது. 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் அதற்கு மழை அதிகமாக பெய்கிறதா..?, வெயில் அதிகம் அடிக்கிறதா..?, என்பது எங்களுக்கு தெரியவில்லை. கஜா புயலால் தேர்தல் தள்ளிப்போக போகிறதா..? அல்லது அரசியல் புயலால் தேர்தல் வரப்போகிறதா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வரும் நவம்பர் 25-ம் தேதி அரியலூரில் நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.