ராம்நகர் மாநகராட்சி ராமலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உரம் செய்ய விரும்பு திட்டம் அறிமுகம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட ராமலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உரம் செய்ய விரும்பு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட ராமலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உரம் செய்ய விரும்பு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் உற்பத்தியாகும் மக்கும்/மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உங்கள் வீட்டிலேயே இயற்கை உரமாக மாற்றும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, ராம்நகர் மாநகராட்சி ராமலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உரம் செய்ய விரும்பு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கான துண்டறிக்கைகளை மாணவர்கள் மத்தியில் அவர் வெளியிட்டார். 

மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் தூய்மை அட்டைகள் வழங்கப்படும். டிச.,31-ம் தேதி வரை நடைமுறையில் இத்திட்டத்தில், மாணவர்கள் சமர்ப்பிக்கும் பூர்த்தி செய்யப்பட்ட தூய்மை அட்டைகளை வகுப்பாசிரியர்கள் தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்படும். 

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்வச் பாரத் திட்ட பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் அதிக சதவீதம் குப்பைகளை தரம்பிரித்து வழங்கி முதலிடம் பிடிக்கும் ஒரு வகுப்புக்கு பரிசு வழங்கப்படும். மாநகராட்சி அரசு, தனியார் மற்றும் சர்வதேச பாடத்திட்ட வழியில் இயங்கும் பள்ளிகள் என 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவின் கீழ் முதல் 3 இடம் பிடிக்கும் பள்ளிகளுக்கு பரிசுக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பெற்றோர் தாங்கள் தயாரித்த உரத்தோடு தங்கள் செல்ஃபி எடுத்து புகைப்படத்துடன் தூய்மை அட்டை பதிவு எண் இட்டு 8190000400 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பவும். செல்ஃபி அனுப்பும் அனைத்து பெற்றோருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, தங்கப் பிரிவிற்கான சான்றிதழ் வழங்கப்படும். 

இப்போட்டியில், பங்கு பெற்றும், செல்ஃபி அனுப்பாத அனைத்து பெற்றோர்களுக்கும் வெள்ளி பிரிவிற்கான சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டம் நடைமுறையில் இருந்து காலத்தில் சிறந்த செல்ஃபு அனுப்பும் 2 பெற்றோருக்கு தினந்தோறும் தலா ஒரு நாணயம் வீதம் வழங்கப்படும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...