திருப்பூர் : தமிழக அரசு அறிவித்துள்ள வணிக வரிகளின் பிராந்திய பிரிவிற்கு திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக அறிவிக்க வேண்டும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் : தமிழக அரசு அறிவித்துள்ள வணிக வரிகளின் பிராந்திய பிரிவிற்கு திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக அறிவிக்க வேண்டும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை இணைத்து வணிக வரிகளின் புதிய பிராந்திய பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்கு ஈரோட்டை தலைமையிடமாக பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, ஈரோட்டிற்கு பதிலாக திருப்பூரை இதன் தலைமையிடமாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ. 42,000 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. இது, 2022-ம் ஆண்டு முதல் ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பங்களிப்பாகும். அதுபோக, திருப்பூர் மற்றும் பல்லடம் நூற்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் ஈரோட்டை காட்டிலும் திருப்பூரில்தான் அதிகம்.

ஆகவே, இதுபோன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை தொழில்நிறுவனங்களின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வணிக வரித்துறை ஆணையர் டி.வி. சோமநாதன் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை இணைத்து வணிக வரிகளின் புதிய பிராந்திய பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்கு ஈரோட்டை தலைமையிடமாக பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, ஈரோட்டிற்கு பதிலாக திருப்பூரை இதன் தலைமையிடமாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ. 42,000 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. இது, 2022-ம் ஆண்டு முதல் ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பங்களிப்பாகும். அதுபோக, திருப்பூர் மற்றும் பல்லடம் நூற்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் ஈரோட்டை காட்டிலும் திருப்பூரில்தான் அதிகம்.

ஆகவே, இதுபோன்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை தொழில்நிறுவனங்களின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வணிக வரித்துறை ஆணையர் டி.வி. சோமநாதன் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.