டிஜிலாக்கர் உள்ளிட்டவை மூலமாக ஆவணங்களை காட்டலாம் : புதிய சட்டவிதிகளை அறிமுகம் செய்தது மத்திய அரசு

டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தும் வகையிலான சட்டவிதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் வாகன ஓட்டிகள் தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தும் வகையிலான சட்டவிதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

வாகன ஓட்டிகளின் வசதிக்காக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் டிஜிலாக்கர், எம்-பரிவாஹன் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை கேட்கும் போது, எம்-பரிவாஹன் செயலி, டிஜிலாக்கர் ஆகியவற்றின் மூலம் அவற்றை காண்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அவ்வாறு காண்பிக்கப்படும் போது, அதனை போலீசார் ஏற்க மறுப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, மத்திய போக்குவரத்து விதி எண் 139-ன் கீழ் புதிய சட்டவிதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களது ஆவணங்களை எம்-பரிவாஹன் செயலி, டிஜிலாக்கர் ஆகியவற்றின் மூலம் போலீசாரிடம் காண்பித்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த ஆன்லைன் ஆவணங்களில் வாகனத்தின் பதிவுநாள், காப்பீடு, தரம் , பெர்மிட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ளடக்கி இருக்கும். இதன்மூலம், வாகன ஓட்டுநர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

மேலும், இந்த விதியின் மூலம் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன வாகனங்களை, அடுத்த ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதோடு, 138பி விதியின் கீழ் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், முறையாக அதனை மூடாமல் கொண்டு செல்வது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...