கோவை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், நெஞ்சு வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், நெஞ்சு வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.



மதுரையைச் சேர்ந்த திருநாவுக்கரசின் மகன் ரவி(56). இவர் திருப்பூர் புறநகர் காவல் நிலையத்தில் கொலை, கூட்டுக்கொலை போன்ற குற்றசாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். 



இவர் கடந்த சில நாட்களாகவே நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று சிறையில் இருந்த போது, மாலை சுமார் 4 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்க சிறை நிர்வாகத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறைவாசி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த 31.03.2006 முதல் கோவை மத்திய சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...