கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சில புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சில புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சமூக ஆர்வலர் மணி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு ஒன்றை அளித்தார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் ஒருசில பள்ளிகளில் இன்று தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. "மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளில் தமிழ் உள்பட ஒருசில புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாடங்களின் புத்தகங்கள் எப்போது தருவார்கள் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்," என்கிறார் சமூக ஆர்வலர் மணி.
இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் சில புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய புத்தகங்கள் இரண்டு தினங்களுக்கு வழங்கப்படும்," எனக் கூறினார்.

கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சமூக ஆர்வலர் மணி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு மனு ஒன்றை அளித்தார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் ஒருசில பள்ளிகளில் இன்று தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. "மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளில் தமிழ் உள்பட ஒருசில புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாடங்களின் புத்தகங்கள் எப்போது தருவார்கள் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்," என்கிறார் சமூக ஆர்வலர் மணி.
இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் சில புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய புத்தகங்கள் இரண்டு தினங்களுக்கு வழங்கப்படும்," எனக் கூறினார்.