கோவை : காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மாநில தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக டாடாபாத் மத்திய அலுவலகம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) மாநில செயலாளர் மதுசூதனன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,"தற்போது 42,000 காலி பணியிடங்கள் உள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ள நிலையில், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தடை இல்லா மின்சாரம் கிடைக்கப் பெற பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதே போல், திருப்பூரில் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
