கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை தினமும் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளி அன்று மட்டும் 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனிடையே, நவம்பர் 1 முதல் நவம்பர் 6 வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதே போல் நவம்பர் 7 முதல் 12 -ம் தேதி வரை இயக்க பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. ஆக மொத்தம் தீபாவளியையொட்டி இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலம் 4.5 கோடி அரசு போக்குவரத்து கழகம் கோவைக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சுமார் 15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டினை காட்டிலும் இந்தாண்டு பேருந்துகளும் அதிகம் வருமானமும் அதிகம்." என்றார்.
கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை தினமும் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளி அன்று மட்டும் 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனிடையே, நவம்பர் 1 முதல் நவம்பர் 6 வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதே போல் நவம்பர் 7 முதல் 12 -ம் தேதி வரை இயக்க பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி கிடைத்துள்ளது. ஆக மொத்தம் தீபாவளியையொட்டி இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலம் 4.5 கோடி அரசு போக்குவரத்து கழகம் கோவைக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.4.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சுமார் 15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டினை காட்டிலும் இந்தாண்டு பேருந்துகளும் அதிகம் வருமானமும் அதிகம்." என்றார்.