கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.
கோவை: கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கினார்.
பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50) இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். பகலில் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடைக்கு மிட்டாய் வாங்க வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி கடையின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமி மிட்டாய் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது செல்வராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சரோஜினி ஆஜராகினார்.
பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50) இரவு நேரத்தில் அதே பகுதியில் உள்ள கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். பகலில் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடைக்கு மிட்டாய் வாங்க வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி கடையின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமி மிட்டாய் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது செல்வராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சரோஜினி ஆஜராகினார்.