கோவை: கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த உரிமையாளரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் ஜே.பி.ஆர் ஈமு கோழி நிறுவனத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்தனர்.
நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவை, திருப்பூர், ஈரோடு, பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். இந்நிலையில் ரூபாய் ஒரு கோடியே 66 லட்சத்தை ஈமு கோழி நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக பணம் செலுத்தியவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், ராஜேஸ்வரன், பத்மநாபன், ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது கடந்த ஒரு ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி பாபு தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை தீவிரமாக தேடிய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் ஜே.பி.ஆர் ஈமு கோழி நிறுவனத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்தனர்.
நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவை, திருப்பூர், ஈரோடு, பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். இந்நிலையில் ரூபாய் ஒரு கோடியே 66 லட்சத்தை ஈமு கோழி நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக பணம் செலுத்தியவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், ராஜேஸ்வரன், பத்மநாபன், ஆகியோரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது கடந்த ஒரு ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து, நீதிபதி பாபு தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை தீவிரமாக தேடிய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.