திருப்பூர் : தெருவிளக்கு வசதியில்லாததைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பதாகைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : தெருவிளக்கு வசதியில்லாததைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பதாகைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த கோணாபுரம், பட்டம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2 வாரத்திற்கு முன் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக தெருவிளக்குகள் வெடித்தும், இணைப்பு தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரவு பணி முடிந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரன், தெருவிளக்கு பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி கழுத்தில் பாதகைகள் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த கோணாபுரம், பட்டம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2 வாரத்திற்கு முன் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக தெருவிளக்குகள் வெடித்தும், இணைப்பு தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரவு பணி முடிந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரன், தெருவிளக்கு பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி கழுத்தில் பாதகைகள் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.