குழந்தைகளின் தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்றக்கோரிய உத்தரவை திரும்பப்பெறக் கோரி பெரியார் நகர் பகுதி மக்கள் மனு

கோவை : குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை வரை வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.

கோவை : குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை வரை வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.



நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் வீடுகளை அகற்றம் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டிய மக்கள் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகளும் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், காலஅவகாசம் கோரி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். 

கடந்த வாரம் மக்கள் குறைதீர்ப்பு நாளில் உக்கடம் பை-பாஸ் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்திருந்தனர். இவர்களுக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், காலஅவகாசம் கோரி மனு அளித்திருந்தனர். 



இந்த நிலையில், 10-வது வார்டு வ.உ.சி வீதி, பெரியார் நகர் மக்கள் தங்களது குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய இருப்பிடத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு 15 கி.மீ. தூரம் இருக்கிறது. மேலும், தற்போது பயிலும் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வருவதில் சிரமம், மாற்று சான்றிதழ் பெற்று வேறு அரசு பள்ளியில் சேர்ப்பதில் காலதாமதம் மற்றும் வேலைக்குச் சென்றுவருவதில் இடையூறு போன்ற இன்னல்கள் உள்ளன. 

எனவே, தங்களது குழந்தைகளின் இறுதி ஆண்டு தேர்வு முடியும் வரை தற்போது வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி வழங்க வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...