கோவை: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் பகுதியில் 13 பேரை கொன்ற பெண் புலி (அவ்னி) கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் பகுதியில் 13 பேரை கொன்ற பெண் புலி (அவ்னி) கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது. இதற்கு மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பெண் புலி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், புலிகள் அவசத்தை உணர்த்தும் வகையிலும் கோவையில் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ஹியுமன் அனிமல் சொசைட்டி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 25 பேர் நேற்று கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே கூடி புலி கொல்லப்பட்டதற்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மேலும், புலிகள் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "தொழிற்சாலை அமைவதற்காக வனப்பகுதியை அழித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இது போன்று தொடர்ந்து நமது தேசிய விலங்கு கொல்லப்பட்டு வந்தால் அது நமக்கு பேராபத்தாக முடியும்." என்றனர்.