நீலகிரி: நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஞாயிற்றுக் கிழமை பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீலகிரி: நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஞாயிற்றுக் கிழமை பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் சுற்றுலா பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீலகிரி மலை ரயில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்கிறது. அதில் பயணம் செய்யும் பயணிகள் புளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை உட்பட பிற இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலை ரயில் என்ஜின் பழுதடைந்ததால் குன்னூர் ரயில்வே பொறியாளர்கள் குன்னூரில் உள்ள லோகோ ஷெட்டில் வைத்து பழுது பார்த்து என்ஜினை சூடேற்றினர்.
பின்னர் பெட்டிகள் பொருத்தப்பட்டு மலை ரயிலை இயக்கினர். குன்னூரிலிருந்து சிறிது தூரம் சென்றதும் மீண்டும் என்ஜின் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் ஊழியர்கள் மெதுவாக ரயிலை இயக்கி காட்டேரி ரயில் நிலையம் வரை கொண்டு சேர்த்தனர். மேலும் ரயிலை இயக்க முடியாது என்பதால் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து குன்னூர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி இரண்டு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு ரயிலில் இருந்த 210 பயணிகளையும் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தனர் இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. தினந்தோறும் இயக்கப்படும் ரயில் என்ஜின் பராமரிப்பு பணியில் இருந்ததால் வேறு என்ஜின் இயக்கப்பட்டதால் தான் இது போன்று ஆனது என்று ஊழியர்கள் கூறினர்.